ஆப்நகரம்

ரூ.5 நோட்டுகளும் ரூ.10 காயின்களும் செல்லாதா.? திருவாரூர் மக்கள் அவதி..

கொல்லுமாங்குடி பகுதியில் 5 ரூபாய் நோட்டுகளும் 10 ரூபாய் காயின் களும் செல்லாது என வணிகர்கள் மற்றும் பேருந்து நடத்தினார்கள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 19 Apr 2023, 1:35 pm

ஹைலைட்ஸ்:

  • திருவாரூரில் ஐந்து ரூபாய் நோட்டுகளையும் 10 ரூபாய் நாணயங்களையும் வாங்க மறுக்கும் வணிகர்கள்
  • அதனால் பொதுமக்கள் அவதி
  • அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil thiruvarur five rupees note refusal
இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய ஐந்து ரூபாய் நோட்டுகளும் பத்து ரூபாய் நாணயங்களும் இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது தான். இருப்பினும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் மற்றும் ஐந்து ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு பெரும்பாலானோர் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அதனால் அவை நடைமுறையில் உபயோகப்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் தேங்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு நேரிடும் அபாயமும் உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த ஆண்டு வரை சென்னையில் இதுபோன்று பத்து ரூபாய் நாணயங்களை பெரும்பாலான இடத்தில் வாங்க மறுத்த நிலையில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் தற்போது சென்னை போன்ற மாநகர் பகுதியில் ஐந்து ரூபாய் நோட்டுகளும் பத்து ரூபாய் நாணயங்களும் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி, பேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐந்து ரூபாய் நோட்டுகளும் பத்து ரூபாய் நாணயங்களும் செல்லாது என வணிகர்கள் மற்றும் பேருந்தில் நடத்தினார்கள் என கூறி அதனை வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும் வணிகர்களிடம் இருந்து பொதுமக்களும் அதனை திரும்ப வாங்க மறுப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



அது மட்டுமல்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை வழித்தடத்தில் மயிலாடுதுறை நோக்கி செல்லக்கூடிய பல பேருந்துகளில் நடத்துனர்கள் ஐந்து ரூபாய் நோட்டுகளையும் பத்து ரூபாய் நாணயங்களையும் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து குற்றம் சாட்டுகின்றனர்.

புதுச்சேரியில் பட்டா கத்தியை உருவுவது போல் வீடியோ.. சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு

அதுபோல பல்வேறு இடங்களில் ஐந்து ரூபாய் நோட்டுகளையும் பத்து ரூபாய் நாணயங்களையும் கொடுத்தால் செல்லாது எனக் கூறி அதனை வாங்க மறுப்பது திருப்பி கொடுத்து விடும் அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐந்து ரூபாய் நோட்டுகளும் பத்து ரூபாய் நாணயங்களும் செல்லும் எனக் கூறி அதனை நடைமுறைக்கு கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி