ஆப்நகரம்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. வெளியான பகீர் பின்னணி!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி 5ஆம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‌

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 19 Aug 2022, 11:31 am

ஹைலைட்ஸ்:

  • திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவி விபரீத முடிவு
  • 5ஆம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை
  • தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகள் காயத்ரி. இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு ஐந்தாம் ஆண்டு ஹவுஸ் சர்ஜன் படித்து வருகிறார்.
இவர் மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான தங்கும் விடுதியில் தனி அறையில் தங்கி உள்ளார். இந்நிலையில் காயத்ரி இன்று காலை முதலே அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் வகுப்புக்கு சென்று திரும்பிய அவரது நண்பர்கள் காயத்ரி அறையின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அங்கு காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மாணவர்கள் ஒன்றிணைந்து காயத்ரியை மீட்டு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காயத்ரி மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

இல்லம் தேடி கல்வி கற்கச் சென்ற குழந்தைகள்.. மின்சாரம் தாக்கி படுகாயம்.. திருவாரூரில் பரபரப்பு!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவ மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி