ஆப்நகரம்

என்னை போகச் சொல்ல நீ யார்?; போலீசை குத்தி கிழித்த வாலிபர்!

என்னை வீட்டுக்கு போக சொல்ல நீ யார்? என கேட்டு போலீஸ்காரரை கத்தியால் குத்திக்கிழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 1 Jul 2022, 3:49 pm
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் கடைத்தெரு பகுதியில் கத்தியை வைத்துக்கொண்டு சூர்யா என்ற வாலிபர் கடந்த வாரம் அலம்பல் செய்துள்ளார்.
Samayam Tamil கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்


இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரித்துவாரமங்கலம் காவல் துறையினரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்டு அங்கு காவலர் மணிகண்டன் என்பவர் விரைந்து வந்துள்ளார்.

இதன் பின்னர் சூர்யாவை வீட்டுக்குப் போகும்படி காவலர் மணிகண்டன் கூறியுள்ளார். அதற்கு சூர்யா, ‘என்னை வீட்டுக்கு போக சொல்ல நீ யார்?’ என்று கேட்டபடி தனது கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு காவலர் மணிகண்டனின் கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து உள்ளான்.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

இதில் படுகாயம் அடைந்து காவலர் மணிகண்டன் துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவலர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு காவலர் மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரித்துவாரமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சூர்யாவை தேடி வந்தனர்.

மாணவர்கள் செம ஹேப்பி; அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சூர்யாவை இன்று காவல் துறையினர் கைது செய்தனர். காவலர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி