ஆப்நகரம்

பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம்.. திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்பட பாணியில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 15 Aug 2022, 7:22 am

ஹைலைட்ஸ்:

  • பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம்
  • திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Tiruvarur district BJP president Baskar
திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்வில் இளைஞர் ஒருவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பதும், அவர் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வை எழுதுவதற்காக வந்ததும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் நாகரத்தினம் அளித்த புகாரின் பேரில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய திவாகர் மாதவன் மற்றும் அவருக்கு உதவியதாக திருவாரூர் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
திமுகவுக்கு எதிராக திரும்பிய அரசு ஊழியர்கள்.. என்ன செய்யப்போகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திவாகர் மாதவனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். அதில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரின் ஹால் டிக்கெட் மற்றும் அவருடைய புகைப்படம் ஒட்டிய ஏனைய பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை தேடிய போலீசார், பாஜக நிர்வாகி ஒருவரது வீட்டில் பதுங்கியிருந்தை அறிந்து அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர், அவர் மீது மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நுழைவுத்தேர்வை மார்க பந்துவை வைத்து எழுதுவது போன்று பட்டதாரி ஆசையில் இளைஞரை வைத்து செமஸ்டர் தேர்வு எழுதிய திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி