ஆப்நகரம்

பார்க்கிங்கில் காவலர் அடாவடி; எஸ்.பி காட்டிய திடீர் அதிரடி!

பார்க்கிங் ஊழியரிடம் அடாவடி செய்த போலீஸ்காரருக்கு எதிராக மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Samayam Tamil 11 Jun 2022, 10:59 pm
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பஸ் நிலையத்தில் தனியார் இருசக்கர வாகன பார்க்கிங் உள்ளது. இந்த இருசக்கர வாகன பார்க்கிங்கில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் வினோத்குமார் என்பவர் தனது வாகனத்தை நிறுத்த வந்துள்ளார்.
Samayam Tamil பார்க்கிங் ஊழியரை தாக்கும் காவலர்கள்
பார்க்கிங் ஊழியரை தாக்கும் காவலர்கள்


அப்பொழுது பார்க்கிங் ஊழியர் ஒருவர், ‘இங்கு வாகனம் நிறுத்த தற்பொழுது இடம் இல்லை. நீங்கள் வேறு எங்காவது வாகனத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் வினோத், ‘காவலரான எனக்கே இங்கு இடமில்லையா?’ என கேட்டு கடும் வாக்குவாதம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் வினோத்குமார் அந்த ஊழியரை கன்னத்தில் அறைந்தார்.

டிடிவி தினகரன் திடீர் சபதம்; கடும் அதிர்ச்சியில் அதிமுக!

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் பின்னர் அங்கிருந்து சென்ற காவலர் வினோத் பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த காவலர் சுந்தரம் என்பவரை அழைத்து வந்து மீண்டும் பார்க்கிங் ஊழியரை தாக்கியுள்ளார்.

இந்த காட்சிகளை வைத்து போலீசில் புகாரளிக்க போவதாக இருசக்கர வாகன காப்பகத்தின் உரிமையாளர் தெரிவித்து இருந்தார். அதன்படி கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வாகன காப்பகத்தின் உரிமையாளர் புகார் அளித்தார்.

மாணவியுடன் நிர்வாண வீடியோ கால்; கப்பல் ஏறிய பா.ஜ.க பிரமுகர் ‘மானம்’!

அதேப் போல் இந்த சம்பவம் குறித்து காவலர் வினோத் தரப்பில், ‘நான் எனது குழந்தை மற்றும் மனைவியுடன் வாகனத்தை நிறுத்த வந்தபொழுது ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரத்தில் அறைந்தேன்’ என புகாருக்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் வாகன காப்பக ஊழியரை தாக்கிய காவலர் வினோத்குமாரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி