ஆப்நகரம்

கேவலப்படுத்திய நிதி நிறுவன ஊழியர்; கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!

நிதி நிறுவன ஊழியர் கேவலமாக பேசியதால் மனம் உடைந்த தொழிலாளி விபரீத முடிவை எடுத்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 29 Jun 2022, 3:57 pm
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் ராஜேஷ் (25). இவருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
Samayam Tamil தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி
தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி


இந்நிலையில் ராஜேஷ் தனது குடும்ப செலவுக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். ஒரு வருடங்களாக கடன் கட்டி வந்த நிலையில் தற்போது பணம் கட்ட முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் ராஜேஷ் வீட்டிற்கு தனியார் நிதி நிறுவன ஊழியர் வந்து கடன் பணம் கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ், ‘தற்போது பணம் இல்லை. விரைவில் கடன் தொகையை செலுத்திவிடுகிறேன்’ என கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

ஆனாலும் ராஜேஷ் வீட்டிற்கு வந்த நிதி நிறுவன ஊழியர் பணம் கேட்டு அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் மிகவும் கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்துவிட்டதாக ராஜேஷ் புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஷ் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து கடந்த ஜூன் 6ஆம் தேதி ஊற்றி தனக்குத்தானே கொளுத்தி கொண்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம் குறித்து குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெல்லமண்டி புதிய ப்ளான்; குழம்பி தவிக்கும் எடப்பாடி!

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

ராஜேஷ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றது உண்மைதான். கூலி வேலை கிடைத்த நாட்களில் கடன் தொகைக்கு சரியான முறையில் வட்டி கட்டி தான் வந்தார். சமீப காலமாக கூலி வேலையும் கிடைக்காமல் குடும்பம் நடத்தவே ராஜேஷ் சிரமப்பட்டு வந்தார்.

இந்த நேரத்தில் நிதி நிறுவனத்தில் இருந்து ஆட்கள் வந்து மிரட்டும் அளவுக்கு பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் தெரு மக்கள் முன்னிலையில் ராஜேஷை நிதி நிறுவன ஆட்கள் கேவலமாக பேசியதால் மனம் உடைந்து இந்த முடிவை எடுத்துவிட்டார்.

பல்லாயிரம் கோடிகளை கடன் பெற்றுக்கொண்டு நாட்டை விட்டே தப்பி சென்றுவிடுகின்றனர். அப்படி இருக்கும்போது குடும்ப சூழ்நிலையால் ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் கடன் வாங்கும் ஏழைகளிடம் ரொம்ப கெடுபிடி காட்டுவது சரியில்லை.

இறந்துபோன ராஜேஷ் மனைவி, பிள்ளைகளுக்கு இனி யார் உதவ போகிறார்கள்? அவர்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவர்களது குடும்பத்து ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

அடுத்த செய்தி