ஆப்நகரம்

25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்; தலைமறைவாகிய ஆசாமிகள் கைது!

வலங்கைமான் அருகே குட்கா மறைத்து வைத்து, தலைமறைவாகி பதுங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 26 Sep 2022, 1:52 pm

ஹைலைட்ஸ்:

  • சுமார் 25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா
  • திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆவூர் பகுதியில் பறிமுதல்
  • தலைமறைவாகி பதுங்கியிருந்தவர்கள் கைது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தலைமறைவாகி பதுங்கியிருந்தவர்கள் கைது​
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆவூர் பகுதியில் சுமார் 25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட ஆவூர் பகுதியில் ஜமாலுதீன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆவூர் பகுதியில் ரஹ்மானியா நகரில் உள்ள அவருக்கு சொந்தமான குடோனில் மொத்த விற்பனை விலையில் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்களை வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன் அடிப்படையில் நன்னிலம் டிஎஸ்பி இலக்கியா தலைமையில் அங்கு விரைந்த வலங்கைமான் காவல்துறையினர் தனிப்படை அமைத்து, 65 பெட்டிகள் கொண்ட குட்கா மற்றும் 98 சாக்கு பைகள் கொண்ட குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். காவல்துறை வருவதை அறிந்த ஜமாலுதீன் மற்றும் பாதுஷா ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

திருவாரூர்: காளியம்மன் கோயில்களில் குறி வைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

இந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வலங்கைமான் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை கும்பகோணம் அருகே தேடப்பட்டு வந்த ஜமாலுதீன் மற்றும் பாதுஷா ஆகிய இருவர்களையும் வலங்கைமான் காவல்துறையினர் கைது செய்தனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி