ஆப்நகரம்

இலவச வீட்டிற்கு லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி.. இளைஞர் விஷம் குடித்து தற்கொலை; வைரலாகும் பகீர் வீடியோ!

பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அரசு அதிகாரி லஞ்சம் கேட்டதால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 12 May 2022, 5:45 pm

ஹைலைட்ஸ்:

  • பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டுவதற்கு லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி
  • இளைஞர் விஷம் குடித்து தற்கொலை
  • திருவாரூரில் பெரும் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
நன்னிலம் அருகே கிராம மேற்பார்வையாளர் பிரதம மந்திரி திட்டத்தில் வீடுகட்டுவதற்கு லஞ்சம் கேட்டதால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கமுதக்குடி கிராமத்தைச் சேர்ந்த லெனின் என்பவரது மகன் மணிகண்டன், வயது 25. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர். அப்போது தன்னிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிராம மேற்பார்வையாளர் மகேஸ்வரன் என்பவர் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால், கடன் பெற்று கொடுத்துள்ளார்.

அதேபோல கீழ்த்தளம் மேலும் ரெண்டல் ஆகியவற்றை கட்டியவுடன் இரண்டாவது தவணைக்கான பணம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக மகேஸ்வரன் கேட்டதால் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் பத்து நாட்கள் கடந்தும் இரண்டாவது தவணை பணம் வராததால் மகேஸ்வரனை தொடர்பு கொண்டபோது சரியான பதில் இல்லாததால் மனமுடைந்த இளைஞர், விஷம் குடித்து அதனை வீடியோவாக சமுக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதை அடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் லஞ்சம் கேட்ட மகேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஓடும் பேருந்திலிருந்து விழுந்த மாணவி; கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீஸார்!

மேலும் அரசு அதிகாரிகள் அவர்களது பணிகளை செய்வதற்கு பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததே மணிகண்டனின் உயிர் போவதற்கு காரணமாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு அதிகாரி ஒருவரின் பண பேராசையால் கணவனை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி