ஆப்நகரம்

ஆசிரியை உதவியுடன் மோசடி?; பிளஸ் ஒன் தேர்வில் பரபரப்பு!

ஆசிரியை உதவியுடன் பிளஸ் ஒன் தேர்வில் முறைகேடு நடந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 15 May 2022, 9:49 pm
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்பட்டிருந்த சிக்கலுக்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொதுத்தேர்வை முழுமையாக நடத்த பள்ளி கல்வித்துறை முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
Samayam Tamil தேர்வறை மாதிரி படம்
தேர்வறை மாதிரி படம்


இதன் ஒரு பகுதியாக அரசு தேர்வுத்துறை பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அதை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தி இருக்கிறது.

அந்த வழிகாட்டு நெறிமுறையில் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்கள் எப்படி செயல்பட வேண்டும்? பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்? என்பது தொடர்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாமல் தேர்வு கூடத்திற்கு வரும் மாணவர்கள் ஷூ, பெல்ட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்படியே அணிந்து வந்தால் கூட தேர்வு மையம் வெளியில் கழற்றி வைக்க வேண்டும் என்று அதிரடியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துர்கா ஸ்டாலின் தந்த ஆசி; பரிசாக வந்தது எம்.பி பதவி?

அதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி தொடங்கி உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது.

அந்தவகையில் திருவாரூர் அருகே இருக்கும் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்ற அன்று மாற்றுத்திறனாளி மாணவி திவ்யா என்பவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தேர்வு எழுதாமல், தேர்வுக்கு வராத மாணவியான வலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி இனிதாவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.

சத்தம் இல்லாமல் நுழைந்தார் கலெக்டர்; சிக்கலில் மாட்டிய..ஊராட்சி செயலர்கள்!

இதன் காரணமாக அங்கு தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியை மலர்கொடி தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பள்ளி கல்வித் துறை துணை இயக்குனர் தலைமையில் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆள் மாறாட்டம் நடைபெற்றதா? அல்லது தவறுதலாக மாணவி திவ்யா மாற்றி அமர வைக்கப்பட்டாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி