ஆப்நகரம்

திமிங்கல எச்சத்தை கடத்திய திமுக பிரமுகர் கைது... இவ்வளவு கோடி ரூபாய் மதிப்பா?

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 23 கோடி ரூபாய் மதிப்பிலான அம்பர்கிரீஸை (திமிங்கல எச்சம்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 19 Aug 2021, 5:47 pm

ஹைலைட்ஸ்:

  • தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு திமிங்கல எச்சம் கடத்த முயற்சி.
  • 23 கோடி ரூபாய் மதிப்பிலான எச்சம் பறிமுதல்.
  • திமுக பிரமுகர் உள்ளிட்ட மூவர் கைது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தமிங்கல எச்சம் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 23 கோடி ரூபாய் திமிங்கல எச்சம் பறிமுதல்
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரில் 23 கிலோ அம்பர்கிரிஸ் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து 23 கோடி ரூபாய் மதிப்பிலான அம்பர்கிரீசை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் இருந்த மேலப்பாளையத்தை சேர்ந்த சதாம் உசேன், நெல்லையைச் சேர்ந்த பிரபாகரன், தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக வட்ட பிரதிநிதியான பெரியசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

திமிங்கல எச்சமான அம்பர்கிரீஸ் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுவதால் சமீபகாலமாக தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி