ஆப்நகரம்

445 ரவுடிகள் வீட்டில் சோதனை: 70 பேர் கைது, தூத்துக்குடி போலீஸ் பயங்கரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் 445 ரவுடிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 55 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 27 Sep 2021, 11:18 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் 445 ரவுடிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 55 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
Samayam Tamil 445 ரவுடிகள் வீட்டில் சோதனை: 70 பேர் கைது, தூத்துக்குடி போலீஸ் பயங்கரம்!


காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில்:
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை கொள்ளை தடுக்கும் வகையில் பழைய ரவுடிகள் கைது செய்யும் நடவடிக்கையை நடைபெற்று வருகிறது.‌

445 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 55 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முன்விரோதம் மற்றும் பழிக்குப்பழி நடைபெறும் கொலைகளை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 138 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி