ஆப்நகரம்

கோவில்பட்டி அருகே விபத்து: கார் மீது லாரி மோதி கல்லூரி மாணவி உட்பட 2 பேர் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 14 Apr 2023, 4:58 pm

ஹைலைட்ஸ்:

  • கோவில்பட்டி அருகே நக்கல முத்தன்பட்டியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
  • காரில் இருந்த இருவரும் உயிரிழப்பு

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நக்கல முத்தன்பட்டியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
காரில் இருந்தவர்கள் உயிரிழப்பு

இவ்விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரை ஓட்டிவந்த குலசேகரப்பேரி ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவர் மகன் முகேஷ் (25) மற்றும் காரில் வந்த ஸ்ரீ வில்லிபுத்தூரைச் சேர்ந்த முத்து என்பவரது மகள் பேச்சியம்மாள் (17) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவில்பட்டி இருந்து ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்ற போது விபத்து

விபத்தில் இறந்த பேச்சியம்மாள் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இருவரும் காரில் கோவில்பட்டி இருந்து ஸ்ரீ
வில்லிபுத்தூர் நோக்கி சென்றபோது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இறந்த இருவரின் உடல்களும் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தூத்துக்குடியில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை - போலி மருத்துவர்கள் அதிரடி கைது
போலீசார் விசாரணை

இவ்விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், லாரியை ஓட்டிவந்த தென்காசி மாவட்டம் கீழ கரிசல்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் மகன் முனீஸ்வரனை (25) கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி