ஆப்நகரம்

தூத்துக்குடியிலும் சசிகலாவுக்கு போஸ்டர்... அதிமுக நிர்வாகி நீக்கப்படுவாரா?

சசிகலாவை விடுதலையை வரவேற்று தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகி நகர் முழுவதும் சுவரொட்டிகள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Samayam Tamil 28 Jan 2021, 10:02 am
பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து சசிகலா நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார் இதைத்தொடர்ந்து நெல்லையில் அதிமுக நிர்வாகி வரவேற்று சுவரொட்டி கட்டப்பட்டதால் அவரை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
Samayam Tamil sasikala poster


இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் சசிகலாவை வரவேற்று, “நட்பின் பரிசுத்தமே வருக” “அடிமட்ட தொண்டையும் அரியணை ஏற்றிய அம்மாவின் அவதாரமே வருக ” “ஆளுமையை உருவாக்கிய ஆளுமையே வருக” என்ற வாசகங்களுடன் அதிமுக நிர்வாகி (அதிமுக முன்னாள் பெருநகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்) ராபர்ட் ஹென்றி ஒட்டிய சுவரொட்டியால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக, எடப்பாடியை பதவியில் அமரவைத்த சசிகலா என்ற நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக அடிமட்டத் தொண்டனையு அரியனை ஏற்றிய அம்மாவின் அவதாரமே என்று போஸ்டர் ஒட்டப்பட்டதை பொதுமக்கல் நின்று கவனித்துச் சென்றனர்.

சசிகலா பக்கம் அணி வகுக்கும் அமைச்சர்கள்: எடப்பாடிக்கு எதிராக தர்மயுத்தம்!


முன்னதாக நெல்லையில் போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கப்பட்ட நிலையில், இவரும் நீக்கப்படுவாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

அடுத்த செய்தி