ஆப்நகரம்

'அசிங்கப்படுத்தி ஆடையை கிழித்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்'... இது புதுசு..!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது மேலும் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 30 Jul 2020, 3:20 pm
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தேசத்தை உலுக்கிய இந்த கொடூர சம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil inspector srithar


அவ்வப்போது கால் வலி, கழுத்து வலி என்று பாசாங்கு காட்டி வரும் ஸ்ரீதர் மருத்துவமனைக்கும், சிறைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் பென்னிக்ஸ், ஜெயராஜ் சம்பவத்தில் மட்டுமில்லாமல் , வேறு பல சித்திரவதை செயல்களிலும் ஈடுபட்டதாக உள்ளூர் வாசிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆசிர்வாதபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் மாவட்ட எஸ்பி ஜெயகுமாரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை!

அந்த புகாரில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தன் மீது பொய் வழக்கு போட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு தனது ஆடைகளை கலைத்து அடித்ததாகவும் தெரிவித்துளளார்.

அடுத்த செய்தி