ஆப்நகரம்

உயரதிகாரி வீட்டில் அதிரடி சோதனை... லஞ்ச ஒழிப்பு போலீஸ் கையில் சிக்கியதென்ன?

தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Samayam Tamil 30 Jul 2021, 8:34 am

ஹைலைட்ஸ்:

  • பத்திரப்பதிவு அலுவலக மேலாளர் வீட்டில் ரெய்டு.
  • மூன்று மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
  • பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தூத்துக்குடி வீட்டுவசதி காலனி குடியிருப்பில் உள்ள குருசாமி என்பவர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்தது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் அவருக்கு எங்கெங்கு சொத்துகள் உள்ளன, வரவு செலவு கணக்குகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்; அமைச்சர் அறிவிப்பால் செம ஹேப்பி!

இந்த சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், பல்வேறு முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்திரப்பதிவு அலுவலக மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி