ஆப்நகரம்

தி கேரளா ஸ்டோரி படத்தை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு ஆர்டர் போடனும் - எச். ராஜா பரபரப்பு பேட்டி!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு ஆர்டர் கொடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தூத்துக்குடியில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 7 May 2023, 5:47 pm

ஹைலைட்ஸ்:

  • தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு ஆர்டர் கொடுக்க வேண்டும்
  • படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை
  • பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பரபரப்பு பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil எச். ராஜா பரபரப்பு பேட்டி
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு ஆர்டர் கொடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தூத்துக்குடியில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படத்தை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு ஆர்டர் போடனும்:

தூத்துக்குடியில் இந்து வியாபாரிகள் முதலாம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு ஆர்டர் கொடுக்க வேண்டும்.‌ தி கேரளா ஸ்டோரி படத்தை எதிர்ப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் 5 ஆண்டுகள் கேரளா பொறுப்பாளராக இருந்துள்ளேன். படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை.

அனைத்து திரையரங்குகளிலும் திரையிட்டு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்:

கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மத்தியப் பிரிதேச மாநிலம் வரிவிலக்கு அளித்துள்ளது. அதைபோல் தமிழகத்தில் அளித்து அந்த படத்தினை அனைத்து திரையரங்குகளிலும் திரையிட்டு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுபோய் கிடக்கின்றது. கடந்த அதிமுக ஆட்சியில் லாக்கப் டெத் சாத்தான்குளத்தில் மட்டும் தான் நடந்தது. ஆனால் திமுக ஆட்சியில் மாதத்திற்கு ஒன்று நடக்கின்றது.

திமுக ஆட்சியில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு ஒரே ஒரு சுதந்திரம்:

தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு ஒரே ஒரு சுதந்திரம் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. அது அவர் எங்கு வேண்டுமானாலும் சைக்கிளிலில் செல்லலாம், செல்பி எடுக்கலாம்.

வேங்கை வயல் விவகாரம்: 2 மாதத்திற்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் - ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா பேட்டி!

ஒரே வருடத்தில் 30‌ ஆயிரம் கோடி அடித்ததுதான் திராவிட மாடல் ஆட்சி:

ஒரே வருடத்தில் 30‌ ஆயிரம் கோடி அடித்ததுதான் திராவிட மாடல் ஆட்சி. ஸ்டெர்லைட் ஆலைக்கு முதன் முதலில் அனுமதி அளித்தது திமுக தான். இந்தியாவில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் 40- சதவீதம் காப்பர் சீனாவிடம் வாங்கலாம். அதன் பொருளாதாரத்தை கூட்டலாம் என்ற நோக்கில் சில கை கூலிகள் தீய சக்திகள் எதிராக போராடினர். ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு மதவிரோத அன்னிய சக்திகள் தான் காரணம்.

வாரிசை உருவாக்கிய சாதனை ஈராண்டு சாதனை - தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்லி வாரிய தமிழிசை!

ஆலையினை திறக்க அனுமதிக்கலாம்:

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது தொடர்ந்து ஆலையினை திறக்க அனுமதிக்கலாம் என்று நினைக்கின்றேன்" பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னால் தேசிய செயலாளர் எச்.ராஜா தூத்துக்குடியில் பேட்டியளித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி