ஆப்நகரம்

நடுத்தர மக்களுக்குச் சொந்த வீடு என்பது இனி சாத்தியமா?

சிமெண்ட், கம்பி, செங்கல், மண், உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கட்டுமான தொழில், கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Jun 2021, 11:23 pm
ஏழை எளிய மக்களே வீடு கட்டுவது என்பது ஒரு கனவாகவே உள்ளது. இந்த சூழல் கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
Samayam Tamil நடுத்தர மக்களுக்குச் சொந்த வீடு என்பது இனி சாத்தியமா?


இதனால் ஏழை எளிய மக்கள் வீடு கட்டி குடியேறவேண்டும் என்பது ஒரு கனவாகி விடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக சிமெண்ட் ஜல்லி மணல் கம்பி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.

கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என அனைவருமே வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போலீசாருக்கு விரும்பிய இடத்துக்கு டிரான்ஸ்ஃபர்... பட் ஒன் கண்டிஷன்னு சொல்லும் எஸ்.பி.!
இந்த திடீர் விலையேற்றத்தால் தூத்துக்குடி கட்டுமான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தூத்துக்குடி கட்டுமான தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

அடுத்த செய்தி