ஆப்நகரம்

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள சம்பவம், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Jun 2020, 12:59 am
சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Samayam Tamil corona positive.


இந்த நிலையில், அந்த நபரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்திருப்பேரை பேரூராட்சிக்குட்ட பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் 15 - க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்திருப்பேரை, காயல்பட்டினம் ஆகிய பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக (containment zones) அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு கொரோனா..!

277 ஆக உயர்வு: இன்று ஒரே நாளில் (ஜூன் 4) தூத்துக்குடி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி