ஆப்நகரம்

கொரோனா பரிசோதனை: தொழிலாளர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதால் பரபரப்பு!!

கொரோனா பரிசோதனைக்காக, கட்டட தொழிலாளர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Apr 2020, 1:29 am
தூத்துக்குடியில் உள்ள பிரபல புதிய சின்னத்துரை ஜவுளிக்கடைக்கு கட்டுமான தொழில்புரிய வந்த வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 25 பேர், கொரோனா பரிசோதனைக்காக சாலையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சம்பவம், நகர மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil labours


தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலையம் முன்பு பிரபல ஜவுளி நிறுவனமான சின்னத்துரை புதிய கடைக்கு கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிக்காக ஒடிசா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலத்திலிருந்து 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு தங்கியிருந்து இப்பணியை மேற்கொண்டு வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஏன் சென்னை கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உள்ளது?

இந்த நிலையில் தூத்துக்குடி மத்திய பாக காவல் துறையினர் அங்கு தங்கியிருக்கும் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு வடமாநில தொழிலாளர்கள் 25 பேர், மருத்துவ பரிசோதனைக்காக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான பணி செய்யும் இடத்துக்க எதிரே அரசு மருத்துவமனை இருக்கும்போது, அங்கு பரிசோதனை செய்யாமல் மக்கள் வசிக்கும் பகுதியில் சாலையில் ஊர்வலம் போல் அவர்களை அழைத்து வந்தது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது..

அடுத்த செய்தி