ஆப்நகரம்

ஊரடங்கால் கொரோனாவை வெல்லும் தூத்துக்குடி: குறைகிறது பாதிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி ஆயிரத்து 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு காரணமாகப் பாதிப்பு படிப்படியாகக் குறைந்த நிலையில் இன்று 664 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 May 2021, 11:51 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது முழு ஊரடங்கு காரணத்தால் கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
Samayam Tamil ஊரடங்கால் கொரோனாவை வெல்லும் தூத்துக்குடி: குறைகிறது பாதிப்பு!


கடந்த 20ஆம் தேதி ஆயிரத்து 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக முழு ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்தது.

இதனால் தொற்று பரவிய எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து. சுகாதாரத்துறை இன்றி வெளியிட்டுள்ள தரவுகள் படி 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட்டால் ஆக்சிஜன் மிகை மாநிலமாக மாறுமா தமிழ்நாடு?
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடியவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 969 ஆகவும் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர்கள் 525 பேர் ஆவர். சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டு வருவதால் தொற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி