ஆப்நகரம்

ஊரே பீதியில இருக்கு இங்க சூதாட்டம் கேட்குது: தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டம் டூவிபுரம் பூ மார்க்கெட் பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து மேற்கொண்ட நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 May 2021, 11:56 pm
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் லைமையிலான தனிப்படையினர் டூவிபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர்.
Samayam Tamil ஊரே பீதியில இருக்கு இங்க சூதாட்டம் கேட்குது: தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!


அப்போது அங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதைப் பொருட்படுத்தாமல், கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை உணராமல் சட்டவிரோதமாகப் பணத்தை வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தது கண்ணன், யோகக்குமார், நயினார், சுந்தர் மகாலிங்கம், லட்சுமணன், முத்துவேல், மந்திரமூர்த்தி ஆகிய 7 பேரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒடிசாவில் இருந்து தூத்துக்குடிக்கு ரயிலில் வந்த மூச்சு காற்று!

மேலும் காவல்துறையினர் அவர்கள் சூதாட வைத்திருந்த பணம் ரூபாய் 8 ஆயிரத்து 700ஐ யும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி