நாட்டிலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 17,728 பேருடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 186 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். 57 பேர் குணமாகி உள்ளனர். இருவர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 பாதிப்பால் 121 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 22 பேர் இன்று முழுமையாக குணமடைந்தனர். இவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் வைரஸ் தொற்று நீங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது பழங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வின் போது மருத்துவர்கள், செவிலியர்களும் உடனிருந்தனர். மேலும் குணமாகி வீடு திரும்புவோரை புகைப்படங்கள் எடுத்தனர்.
தூத்துக்குடி, சேலத்துக்கு எப்போது விமான சேவை?
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவோரால் தமிழகத்தில் வைரஸ் தொற்று கிடுகிடுவென உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் 22 பேர் இன்று முழுமையாக குணமடைந்தனர். இவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் வைரஸ் தொற்று நீங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது பழங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வின் போது மருத்துவர்கள், செவிலியர்களும் உடனிருந்தனர். மேலும் குணமாகி வீடு திரும்புவோரை புகைப்படங்கள் எடுத்தனர்.
தூத்துக்குடி, சேலத்துக்கு எப்போது விமான சேவை?
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவோரால் தமிழகத்தில் வைரஸ் தொற்று கிடுகிடுவென உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.