ஆப்நகரம்

போலி இ பாஸ்: கோவில்பட்டியில் சிக்கிய 9 பேர்!

இ-பாஸை தவறாகப் பயன்படுத்தி வாடகை கார் ஓட்டிய கோவில்பட்டி திமுக நகர மாணவரணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Jun 2020, 1:06 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் இ-பாஸை தவறாக பயன்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் காவல் சோதனைச் சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil fake e pass issue


இதற்கிடையே கோவில்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் தனது சொந்தக் காரை, போலியான காரணங்கள் கூறி இ-பாஸ் எடுத்து கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கும் வாடகைக் கார் ஓட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் சுதேசன், சுகா தேவி மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச் சாவடிக்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்கள் கொண்டுவந்த இ-பாஸை க்யூ.ஆர். கோடு மூலமாக சோதனையிட்டனர். அதில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பூசாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை: சேஸிங் செய்து பிடித்த போலீஸார்!

தொடர்ந்து நடத்திய விசாரணையில், கோவில்பட்டி புதுரோட்டைச் சேர்ந்த கணேசன் மகன் திமுக நகர மாணவரணி துணை அமைப்பாளர் மயில்கர்ணனுக்குச் சொந்தமான கார் என்பது தெரியவந்தது. காரை கோவில்பட்டி அருகே வடக்குத் திட்டங்குளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துராஜ் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

காசியுடன் இன்னும் விசாரணை நடந்து வருகிறதாம்..! தற்போது நிலவரம் என்ன?

விசாரணையில், கடந்த 15ஆம் தேதி இறப்பு நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு செல்ல இ-பாஸ் பெற்று அதை தவறாகப் பயன்படுத்தி சென்னை வண்டலூரில் இருந்து 8 பயணிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து திமுக நகர மாணவரணி துணை அமைப்பாளர் காரை பறிமுதல் செய்த சோதனைச்சாவடி அதிகாரிகள், கிழக்கு காவல் நிலையத்தில் காரை ஒப்படைத்தனர். மேலும், கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த 9 பேரையும் கோவில்பட்டியில் உள்ள கல்லூரி முகாமில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும், இவர்கள் மீது கொரோனா தொற்று நோய் பரவல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி