ஆப்நகரம்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு!

தூத்துக்குடி சங்கர் காலனி காவலர் குடியிருப்பு அருகே 4 வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சியும், ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Sep 2021, 7:20 pm
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சங்கர் காலனி உள்ளது. காவலர் குடியிருப்பு அருகே உள்ள இந்த பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் 4 வீட்டில் தொடர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil தூத்துக்குடி


அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சத்தம் கேட்டு வீட்டில் இருந்த நபர்கள் சத்தம் போட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்‌.

மேலும் அந்த பகுதியில் ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆஷா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை அறுத்துச்சென்றனர். பின்னர் செய்வதறியாது தவித்த அந்த தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பருவமழையில் இருந்து தூத்துக்குடியை காக்கும் பணியில் இறங்கிய எம்.பி.கனிமொழி!

காவலர் குடியிருப்பு அருகே உள்ள பகுதியில் 4 வீடுகளில் கொள்ளை முயற்சி நிகழ்ந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி