ஆப்நகரம்

கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமா? பெண்ணின் உறவினர்கள் தர்ணா

வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் தப்பி ஓடிய குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Samayam Tamil 24 Dec 2020, 10:28 am
இளம் பெண்ணைக் கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடி தப்பியோடிய கணவன் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி, உயிரிழந்த இளம் பெண்ணின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil murder


தூத்துக்குடி ரகமத்துல்லா புரத்தை சேர்ந்தவர் அபு சுந்தர் மியான். இவரது மனைவி பாத்திமா யாஸ்மின். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அபு சுந்தர்சியான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென இறந்து போன பாத்திமா யாஸ்மினை தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி அபு சுந்தர்சியான் மற்றும் அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

நெல்லை: திருமணமாகி ஒருமாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

ஆனால் வரதட்சணை கொடுமை காக பாத்திமா யாஸ்மின் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறி அவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அபு சுந்தர் சியான் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் தப்பி ஓடிய குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தப்பியோடிய கணவனையும், அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி