ஆப்நகரம்

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை!!

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியிவ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Jul 2020, 11:45 pm
தூத்துக்குடி கே.டி.சி., நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (29). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கௌசல்யா (25). இந்த தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
Samayam Tamil murder


கௌசல்யாவின் உடன்பிறந்த சகோதரி மகேஸ்வரி. இவரது கணவர் விக்னேஷ்வரன் (30). பழ வியாபாரம் செய்து வருகிறார். மகேஸ்வரிக்கும், பிரேம்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனை மகேஸ்வரியின் கணவர் விக்னேஸ்வரன் கண்டித்துள்ளார். இந்த நிலையிவ் செவ்வாய்க்கிழமை (21.7.2020) இரவு 8 மணியளவில், தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மகேஸ்வரியின் வீட்டிற்கு பிரேம்குமார் சென்று வந்துள்ளார்.

சாத்தான்குளம்: மகேந்திரன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

இதுகுறித்து அறிந்த விக்னேஸ்வரன் அவர் மீது ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து கேடிசி நகரில் உள்ள பிரேம்குமார் வீட்டிற்கு சென்று, அங்கு அவரை வீட்டிற்கு வெளியே வரவழைத்து சரமாரியாக அரிவாளால் வெட்ட விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி