ஆப்நகரம்

மாணவனிடம் சாதிவெறியை தூண்டும் ஆசிரியை: பணி இடை நீக்கம் செய்த பள்ளி கல்வித்துறை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவரிடம் சாதி ரீதியாக பிரிவினையை தூண்டி பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated bySrini Vasan | Samayam Tamil 16 Jun 2022, 5:43 pm

ஹைலைட்ஸ்:

  • பள்ளி மாணவர்களிடம் சாதிவெறியை தூண்டும் ஆசிரியர்
  • பணி இடை நீக்கம் செய்து உத்தரவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வருகின்ற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் முனீஸ்வரனிடம் போனில் சாதி ரீதியாக பேசியுள்ளார்.

அந்த ஆடியோவில், நீயும் நானும் இந்த சாதி, ஆனா அந்த பி.டி. டீச்சர் வேற சாதி என கூற அந்த மாணவன் 'எல்லோரும் சமம்தானே ' என பதில் அளித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த ஆசிரியர் விடாமல் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொறுப்பு அந்த சாதியினருக்குச் செல்லக்கூடாது எனவே உங்க சாதியைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

சமத்துவத்தை போதிக்க வேண்டிய பள்ளி ஆசிரியையே சாதி வெறியை தூண்டும் வகையில் பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் , மாணவரிடம் சாதி ரீதியாகப் பேசிய பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகிய இரு ஆசிரியர்களை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த செல்போன் உரையாடல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி கடைகளில் தொடர் கொள்ளை - வணிகர்கள் பீதி
இந்நிலையில், இந்த உரையாடலில் பேசிய குளத்தூர் அரசுப் பள்ளி மாணவன் முனீஸ்வரனிடம், தமிழ்நாடு அனைத்து தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் முகவை கே கே பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அவர் அந்த மாணவனிடம், "தென்மாவட்டங்களில் ஜாதி வன்முறையை தூண்டும் வகையில்" அந்த ஆசிரியை சொன்னது போல் எதுவும் செய்யக் கூடாது, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், மாணவனிடம் ஜாதி வன்முறையை தூண்டும் வகையில் பேசிய இந்த ஆசிரியைகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, குளத்தூர் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் தங்கமாரியப்பன், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிப் பள்ளியில் பணிபுரிந்து வரும் உதவித் தலைமை ஆசிரியை கலைச்செல்வி மற்றும் கணினி ஆசிரியை மீனா ஆகிய இருவரும் பள்ளி மாணவனிடம் ஜாதி பற்றி பேசியுள்ளதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமுதாய மக்களிடம் ஜாதி பிரச்சினையை உருவாக்கும் நோக்கில் செயல்பட்ட இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி