தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயியான இவருக்கு அந்த பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது இந்த நிலத்தை சிலர் சொந்தம் கொண்டாடி வருவதுடன் தங்களுக்கும் பங்கு தரவேண்டும் என்று இவரை மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து சிவசுப்பிரமணியன் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.