ஆப்நகரம்

அரை நிர்வாணத்துடன் விவசாயி... கதிகலங்கி போன கலெக்டர் ஆஃபிஸ்!

தமக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் சிலர் மிரட்டி வருவதை கண்டித்து விவசாயி அரை நிர்வாண போராட்டம் நடத்தியதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 27 Jul 2021, 7:44 pm

ஹைலைட்ஸ்:

  • விவசாயிக்கு சொந்தமான இடத்தை சிலர் உரிமை கொண்டாடினர்.
  • போலீசில் புகார் அளித்தும் பயனில்லை.
  • கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி அரை நிர்வாண போராட்டம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயியான இவருக்கு அந்த பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது இந்த நிலத்தை சிலர் சொந்தம் கொண்டாடி வருவதுடன் தங்களுக்கும் பங்கு தரவேண்டும் என்று இவரை மிரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சிவசுப்பிரமணியன் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மனமுடைந்த அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி