ஆப்நகரம்

காணும் பொங்கலுக்கு வேற லெவலில் தயாராகும் தூத்துக்குடி: மேயர் அறிவிப்பு!

காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 30 Dec 2022, 10:23 am
காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள கடற்கரை பூங்காக்கள் மற்றும் படகு குழாம் புதுப்பிக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Samayam Tamil jegan periyasamy


தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆணையர் சாரு ஸ்ரீ, திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள முத்துநகர் பூங்கா, ரோச் பூங்கா, மற்றும் நகரின் பல்வேறு பகுதியில் உள்ள பூங்காக்கள் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பொழுது போக்குக்காக புதுப்பிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
நெல்லையில் கொலை, கொள்ளை வழக்குகள்: 2022 எப்படி இருந்தது?
மேலும் கடற்கரையில் உள்ள படகு குழாம் தற்போது 6 மணி வரை செயல்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உயர்தர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இரவு 10 மணி வரை மக்கள் பயன்பாட்டிற்காக வசதிகள் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திர மூர்த்தி பேசும்போது, தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது. ஆகையினால் முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் மாநகரப் பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் உள்ளதா என்பது குறித்து செவிலியர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி