ஆப்நகரம்

பணம் தந்தாதான் டிரான்ஸ்ஃபர்... மனமுடைந்த மாற்றுத்திறனாளி எடுத்த விபரீத முடிவு

பணி இடமாறுதல் வழங்க அதிகாரி பணம் கேட்டதால் மனவேதனை அடைந்த மாற்றுத்திறனாளி டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 26 Jul 2021, 11:03 pm

ஹைலைட்ஸ்:

  • மாற்றுத்திறனாளி டாஸ்மாக் அலுவலர் பணியிட மாறுதல் கேட்டுள்ளார்.
  • 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் தந்தால்தான் டிரான்ஸ்ஃபர் என்று அதிகாரி ஸ்ட்ரிக்டாக சொல்லியுள்ளார்.
  • மனம் நொந்த மாற்றுத்திறனாளி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
தூத்துக்குடி போல்டன் புரத்தை சேர்ந்தவர் நாகராஜன். மாற்றுத்திறனாளியான இவர் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு இடமாறுதல் கேட்டு அதிகாரியிடம் அணுகியபோது அவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளியான தன்னால் பணம் கொடுக்க இயலாதென நாகராஜன் கூறியுள்ளார். ஆனால் பணம் கொடுத்தால்தான் இடமாறுதல் வழங்க முடியும் என அதிகாரி தெரிவித்ததால் மனமுடைந்த அவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய்யை உடம்பில் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி நாகராஜனை காப்பாற்றினர். விசாரணை நடத்துவதற்காக அவரை சிப்காட் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் சிவி சண்முகத்துடன் 3 ஆயிரம் பேர் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளியான டாஸ்மாக் ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி