ஆப்நகரம்

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் கொடுமை... தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி

ஜாமீனில் கொண்டுவரும் நடவடிக்கையில் காவல்துறையினர் சிலரே ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Samayam Tamil 28 Dec 2020, 7:01 pm
மாற்றுத் திறனாளியான சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய்-மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil தற்கொலைக்கு முயன்ற தாய் மகள்


தூத்துக்குடி மாவட்டம் அயன் பொம்மையா புரத்தை சேர்ந்தவர் முனியம்மாள். இவரது 14 வயது மகள், உடல் நிலை சரியில்லாத மற்றும் மாற்றும் திறனாளியும் ஆவார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கடந்த 15ஆம் தேதி இந்தக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக விளாத்திகுளம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

பொங்கல் பரிசுக்கு ரேஷன் கடைகளில் டோக்கன்... உங்க வீட்டுக்கு வந்தாச்சா?

ஆனால் தற்போது ஐயப்பனை ஜாமீனில் கொண்டுவரும் நடவடிக்கையில் காவல்துறையினர் சிலரே ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த போக்கைக் கண்டித்து, தாய் முனியம்மாள் தனது மகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி