ஆப்நகரம்

நாலுமாவடி இயேசு அழைக்கிறார்: 15 லட்சம் தூத்துக்குடிக்குக் கொடுத்திருக்கிறார்!

தூத்துக்குடியில் உள்ள நாலுமாவடி இயேசு அழைக்கிறார் சபை சார்பில் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ரூ. 15 லட்சம் மதிப்பிலான மருந்துகள் மற்றும் உபகரணங்களை மோகன்சிலாசர் வழங்கினார்.

Samayam Tamil 17 May 2021, 11:56 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
Samayam Tamil நாலுமாவடி இயேசு அழைக்கிறார்: 15 லட்சம் தூத்துக்குடிக்குக் கொடுத்திருக்கிறார்!


இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு அழைக்கிறார் சபை நிறுவனம் சார்பில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இயேசு அழைக்கிறார் சபை நிறுவனத்தலைவர் மோகன்சிலாசர் கனிமொழி எம்பி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரிடம் வழங்கினார்.

அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் இருந்து தூத்துக்குடிக்கு ரயிலில் வந்த மூச்சு காற்று!

எனினும் 2 மருத்துவமனைகளிலும் பல்வேறு உதவிகள் தொடர்ந்து தேவைப்படுவதாக நிர்வாகத்தினர் மோகன் சி லாசரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குறிப்பிட்ட கிறிஸ்தவ அமைப்பினரும் நிச்சயம் உதவிகளைச் செய்யத்தயார் என உறுதி அளித்துள்ளது.

அடுத்த செய்தி