ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை; மக்கள் பார்வைக்கு வெளியிட தமிழக அரசுக்கு கோரிக்கை!

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை அறிக்கையை உடனடியாக மக்கள் பார்வைக்கு வெளியிட தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 18 May 2022, 6:24 pm

ஹைலைட்ஸ்:

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம்
  • ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நபர் விசாரணை அறிக்கை
  • மக்கள் பார்வைக்கு வெளியிட தமிழக அரசிடம் கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அதனை உடனடியாக தமிழக அரசு வெளியிட தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்த 2018 ஜூன் 4ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சான்றாக குறியீடு செய்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதையடுத்து விசாரணை நிறைவடைந்த நிலையில் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதல்வரிடம் ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்தார்.

கை கொடுக்கும் காற்றாலை மின்சாரம்: இனி நோ பவர்கட்!

இதையடுத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்: "தமிழக அரசு அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை உடனடியாக பொதுமக்கள் பார்வைக்கு தளத்தில் வெளியிட வேண்டும். மேலும் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி