ஆப்நகரம்

தூத்துக்குடி சம்பவம்...விசாரணை ஆணையத்தில் வழக்கம்போல் ரஜினியின் வழக்கறிஞர் ஆஜர்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத்தின் முன் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி இன்று நேரில் ஆஜரானார்.

Samayam Tamil 19 Jan 2021, 10:03 pm
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.
Samayam Tamil நீதிபதி அருணா  ஜெகதீன் விசாரணை ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீன் விசாரணை ஆணையத்தின் முன் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் ஆஜர்


இது சம்பந்தமாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இந்த ஆணையம் இதுவரை 23 கட்ட விசாரணை நடத்திய பின் நேற்று 24 வது கட்ட விசாரணையை துவங்கியுள்ளது.

இந்த விசாரணையில், பொதுமக்களின் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி இன்று ஆணையத்தில் நேரில் ஆஜரானார்.

படகு மூலம் மாவட்ட மக்களை திட்டமிட்டு மீட்ட போலீஸ்!

துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், அங்கு செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடியில் சமூகவிரோதிகள்தான் வன்முறையை தூண்டினர். அதனால்தான் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தும் நிலை ஏற்பட்டது" எனக் கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி