ஆப்நகரம்

அடுத்த சோகம், 'தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதில் தொழிலாளி தற்கொலை'...

தூத்துக்குடி அருகே போலீசார் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Jun 2020, 1:56 pm
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. கட்டடத் தொழிலாளியான அவர் சாலையில் மது போதையில் விழுந்து கிடப்பதாக கூறி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த காவலர்கள், கணேசமூர்த்தியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், சம்பவம் குறித்து கணேசனின் குடும்பத்துக்கு தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் நேற்றிரவு திடீரென தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து போலீசார் தாக்கியதில் ஏற்பட்ட அவமானத்தினாலும், வலியினாலும் தான் கணேசன் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுகுறித்து அவர்கள் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று, மது போதையில் வந்த கணேசன் சாலையில் தள்ளாடி விழுந்துள்ளார்.

சம்பவம் அறிந்து வந்த போலீசார், கணேசனை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். அவரது உடலில் காயங்கள் உள்ளன. இதனால் உடல் வலியிலும், மன உளைச்சலிலும் இருந்த கணேசன் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.

திமுக: மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி!

சாத்தன்குளத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு, போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்பு சம்பவம் நாடளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற நிகழ்வுகள் காவல்துறையின் மீது இருக்கும் நம்பிக்கை தவிடுபொடியாகி வருகிறது. இருப்பினும் கணேசனின் இறப்பு குறித்து சந்தேகமே எழுந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என உறவினர்கள் உறுதியாக உள்ளனர்.

அடுத்த செய்தி