ஆப்நகரம்

தூத்துக்குடியில் உச்சத்தில் சாதிவெறி... ரவுடி உடல் அரிவாளுடன் அடக்கம்...

சாதி வெறியின் உச்சமாகப் பார்க்கப்பட்ட இந்த செயல் குறித்து காவல்துறையினர் தரப்பு விசாரிக்கத் தொடங்கியுள்ளது. ​

Samayam Tamil 20 Aug 2020, 8:14 am
தூத்துக்குடி காவலர் சுப்ரமணியைக் கொன்றுவிட்டு உயிரிழந்த ரவுடி துரைமுத்துவின் உடல் புதைக்கப்படும் போது வீச்சரிவாள் வைத்து புதைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil subramani durai muthu


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் நடைபெற்ற கலவரத்தில், துரை முத்து என்ற ரவுடி, நாட்டு வெடிகுண்டு வீசினார். அதில், சுப்ரமணி என்ற காவலர் வீரமரணம் அடைந்தார். அதேபோல, குண்டு வீசிய துரைமுத்துவும் உயிரிழந்தார்.

உயிரிழந்த சுப்ரமணி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும், சுப்ரமணி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை குண்டுகள் முழங்க, காவலர்களே சுமந்து வந்து அரச மரியாதையுடன் சுப்ரமணியின் நல்லடக்கம் நடைபெற்றது.

போலீசுக்கே இந்த நிலையா, வெடிகுண்டு கூட்டாளியை பிடிங்க- கேப்டன் கோரிக்கை!

இந்நிலையில், எதிர்தரப்பில் இறந்த துரைமுத்துவின் படத்துடன் தேவர் சாதியினர் சுயசாதிப் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்தப் பதிவுகள் மக்களால் அருவருக்கப்பட்ட போதும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் உலவி வந்தன.

இந்நிலையில், துரைமுத்துவின் அடக்கத்தின் போது இறந்த உடல் மீது அரிவாளை வைத்து அடக்கம் செய்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சாதி வெறியின் உச்சமாகப் பார்க்கப்பட்ட இந்த செயல் குறித்து காவல்துறையினர் தரப்பு விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

அடுத்த செய்தி