ஆப்நகரம்

தூத்துக்குடியில் களைகட்டிய சரஸ்வதி பூஜை!

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள சரஸ்வதி சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Samayam Tamil 14 Oct 2021, 6:25 pm

ஹைலைட்ஸ்:

  • சரஸ்வதி பூஜை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  • தூத்துக்குடி சரஸ்வதி கோயிலில் சிறப்பு பூஜை.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை, தூத்துக்குடி
இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் சரஸ்வதி ஒன்றாகும். இந்த பண்டிகை தினத்தில் தங்களது பிள்ளைகளை கல்வி நிறுவனங்களில் சேர்த்தால் அவர்களுக்கு படிப்பு நன்றாக வரும் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு உள்ளது.
அத்துடன் சரஸ்வதி கோயில் சன்னதி முன்பு தங்களது பிள்ளைகளின் கையால் அரிசியில் 'அ' என எழுத வைக்கும் பழக்கமும் நம் சமூகத்தில் வழிவழியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை மாநிலம் முழுவதும் இன்று சிறப்பாத கொண்டாடப்பட்டு வருகிறது.


இதனையொட்டி, தூத்துக்குடி சிதம்பரம் நகர சிதம்பர விநாயகர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி சன்னதியில் இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அம்பாளுக்கு பால், தயிர், வெண்ணை போன்ற வாசனைத் திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றதுடன் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சரஸ்வதியை வழிபட்டனர்.

அடுத்த செய்தி