ஆப்நகரம்

சாத்தான்குளம்: ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், முருகன் மூவரையும் சிறையிலடைக்க உத்தரவு

சாத்தான்குளம் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் இரு சார் ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய மூவரையும் 15 நாட்கள் பேரூரணி சிறையில் அடைக்க உத்தரவு

Samayam Tamil 2 Jul 2020, 10:39 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகியோரை 15-நாட்கள் சிறைக்காவலில் வைக்க, தூத்துக்குடி முதன்மைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil சாத்தான்குளம் காவலர்கள்


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீது சாத்தான்குளம் காவலர்கள் நடத்திய தாக்குதலில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில்

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகளாகக் கருதப்படும் சாத்தான்குளம் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகிய மூன்று பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.


அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த மூன்று பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னாள் இன்று இரவு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணை முடிவடைந்து மூன்றுபேரையும் 15-நாட்கள் பேரூரணி சிறையில் அடைக்க தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 15 நாட்கள் விசாரணை முடிந்ததும், மீண்டும் ஜூலை 17ஆம் தேதி மூவரும் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி