ஆப்நகரம்

புறாவைப் பறக்கவிட்டு காதலை உற்சாகப்படுத்திய நெல்லை யூத்ஸ்!

ஜாதி, மதம், கடந்து வரும் காதலை ஆதரிக்க வேண்டும் என இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெடுத்த வரவேற்பு நிகழ்ச்சி சிலிர்க்க வைத்துள்ளது...

Samayam Tamil 15 Feb 2021, 2:49 am
தூத்துக்குடி மாவட்டத்தில் காதலர் தினத்தினை வரவேற்கும் வகையில் இந்திய வாலிபர் சங்கத்தினர் இதயம் வடிவிலான பலூன் மற்றும் புறாக்களைப் பறக்கவிட்டு கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர்.
Samayam Tamil sdpi party members welcomes valentines day make heart shaped balloons and dove fly
புறாவைப் பறக்கவிட்டு காதலை உற்சாகப்படுத்திய நெல்லை யூத்ஸ்!


பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி காதலர் தினமானது இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடியில் காதலர் தினத்தினை வரவேற்கும் வகையிலும் ஜாதி, மதம், கடந்து வரும் காதலை ஆதரிக்க வேண்டும் என இளைஞர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட இந்திய வாலிபர் சங்கத்தினர் சார்பில் இளைஞர்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரே இதயம் வடிவிலான பலூன்கள் மற்றும் புறாக்களைப் பறக்கவிட்டு காதலர் தினத்தினை வரவேற்கும் விதமாகக் கொண்டாடினர்.

காதலர் தினம்... கோவையில் லவ்வர்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச திராவிடர் கழகம்!

பொதுவாக இந்துத்துவா அமைப்புகள் காதலர் தினத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், காதலர்களை மிரட்டும் செயல்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றன. இந்த சூழலில் எஸ்டிபிஐ இளைஞர்கள் இப்படி ஒரு வரவேற்பு நிகழ்வை ஏற்படுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி