ஆப்நகரம்

தூத்துக்குடி: கடையை உடைத்து பணம் சிகரெட் கொள்ளை

கடையில் அவர் வைத்திருந்த 57ஆயிரம் ரூபாய் ரொக்கபணம், மற்றும் ரூபாய் 12 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது

Samayam Tamil 20 Oct 2020, 4:54 pm
சந்தையடி அருகே இடையன்விளை பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.57ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 12 ஆயிரம் மதிப்பிலான சிகரெட்டுகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil shop damaged and looted cigarette in tuticorin
தூத்துக்குடி: கடையை உடைத்து பணம் சிகரெட் கொள்ளை


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் தங்கவேல்(47). இவர் சந்தையடியை அடுத்த இடையன்விளையில் கடந்த 6 வருடங்களாக பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தங்கவேல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த தங்கவேல் கடையின் ஷட்டரை திறந்து பார்த்தபோது கடையில் அவர் வைத்திருந்த 57ஆயிரம் ரூபாய் ரொக்கபணம், மற்றும் ரூபாய் 12 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தங்கவேல் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இத்தகவலின் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடந்தது குறித்து விசாரணை வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது இந்தப் பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு களால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். போலீசார் அந்தத் தொடர் திருட்டுக்களை தடுக்க இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி