ஆப்நகரம்

முதல் தமிழ் அச்சகம் உருவான ஊர் அடையாளமின்றி அழியும் சோகம்: தூத்துக்கு மக்கள் வேதனை!

முதல் தமிழ் அச்சுக்கூடம் அமைந்த ஊர் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், ஆதாரங்கள் இருக்கிறது பின்பு ஏன் அரசு அதை ஆவணப்படுத்தவில்லை என்றக் கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 29 Sep 2021, 8:38 am
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் என்ற மீனவ கிராமத்தில்தான் முதல் தமிழ் அச்சுக்கூடம் உருவானது என்பதை அரசு ஆவணங்களில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு என புன்னக்காயல் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை கிராமமான புன்னகாயலில்தான் முதல் முதலாக தமிழ் அச்சுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

சரியாக 1580ஆம் ஆண்டு யாழில் தமிழ் அச்சுக்கூடம் அமைக்கப்பட்டு நூல்கள் அச்சாகியுள்ளன. இதனை ஹென்றி அடிகளால் என்பவர் ஆவணப்படுத்தியுள்ளார். அதேபோல் புன்னக்காயலில் தமிழ் அச்சுக்கூடமிருந்தது என்பதை கவிஞர் வைரமுத்து மற்றும் வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர் .

குலசேகரபட்டினம் திருவிழாவுக்கு தடை: தசரா கொண்டாட்டங்கள் மக்கள் இல்லாமல்!
எனவே புன்னக்காயலில் முதல் தமிழ் அச்சுக்கூடம் இருந்தது என்பதை அரசு ஆவணங்களில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி புன்னக்காயல் மீனவ கிராம மக்கள் தூத்துக்குட் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி