ஆப்நகரம்

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி: டிஜிட்டல் கரன்சியில் எப்போது இணையும்?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி டிஜிட்டல் கரன்சியில் விரைவில் இணையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 2 Dec 2022, 11:44 am
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி டிஜிட்டல் கரன்சியில் விரைவில் இணையும். டிஜிட்டல் கரன்சி மூலம் மக்களுக்கு பலன்கள் அதிகம் என்று வங்கி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
Samayam Tamil tmb


தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை பாரத ரிசர்வ் வங்கி தனது சார்பாக அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட அங்கிகாரம் அளித்துள்ளது.

மேலும் அரசுத்துறை சார்ந்த வனிகத்தை மேற்கொள்வதற்காகவும் முகவர் வங்கியாக நியமனம் செய்து பாரத ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
​தமிழக அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கை: இறையன்பு நடத்திய ஆலோசனை!
இதுகுறித்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மத்திய மாநில அரசு துறைகளில் வணிகத்தில் ஈடுபட அனுமதி அளித்துள்ளது
மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் டிஜிட்டல் கரன்சி திட்டத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விரைவில் இணையும். மேலும் ஆர்.பி.ஐ அறிமுகப்படுத்தி உள்ள டிஜிட்டல் கரன்சி மிகவும் பலன் அளிக்கக்கூடிய திட்டமாகும்.

இதன் மூலம் எளிதாக பணம் பரிவர்த்தனை செய்வதன் மூலம் பொது மக்களுக்கு பாதுகாப்பான பண பரிவர்த்தனை எளிதாகும்” என தெரிவித்தார்.

டிஜிட்டல் கரன்சி

டிஜிட்டல் ரூபாய் என்பது டிஜிட்டல் டோக்கன் போன்றது. மதிப்பு என்பது பேப்பர் ரூபாய்க்கு என்ன மதிப்பு உள்ளதோ அதே மதிப்பை கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் என்பது வங்கிகள் மூலம் வாடிகையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பயன்படும். இதை டிஜிட்டல் வாலட் ஒன்று மூலம் நமது ஸ்மார்ட்போன் அல்லது electronic கருவிகளில் சேமிக்கலாம்.

இதை நாம் P2P அல்லது P2M முறையில் பயன்படுத்தலாம். இதை மக்கள் பிறருக்கும், வியாபாரிகளிடமும் பயன்படுத்தலாம். இதை e-Rupee அல்லது QR கோட் மூலம் ஆன்லைன் பரிமாற்றம் செய்யலாம்.

இந்த டிஜிட்டல் ரூபாய் என்பது நாம் தினசரி பயன்படுத்தும் பேப்பர் நாணயம் போல அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கொண்டுள்ளது. இதற்கு எந்த ஒரு வட்டியும் இல்லை. இதை நாம் வங்கிகளில் டெபாசிட் செய்வது மூலம் பணமாக மாற்றிக்கொள்ளமுடியும்.

முதல் கட்டமாக இந்த டிஜிட்டல் பணம் (State Bank OF India, ICICI Bank, Yes Bank, IDFC First Bank) ஆகிய வங்கிகளில் பயன்படுத்தலாம். அடுத்த கட்டமாக Bank of Baroda, Union Bank of India, HDFC Bank and Kotak Mahindra Bank ஆகிய வங்கிகளும் இணையும்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி