ஆப்நகரம்

கடலுக்குப் போனா கொரோனா வரும்: தடை போட்ட தூத்துக்குடி கிராமம்!

தூத்துக்குடி அடுத்துள்ள தருவைகுளம் கிராமத்தில் ஊரடங்கு முடியும்வரை நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 May 2021, 7:31 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடற்கரையில் படகுகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil கடலுக்குப் போக வேண்டாம் கொரோனா வரும்: தடை போட்ட தூத்துக்குடி கிராமம்!


தூத்துக்குடி அருகே தருவைகுளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் மீன் பிடிக்கும் பணியைச் செய்து வருபவர்கள்.

இங்கு சுமார் 150 நாட்டுப் படகுகள் மூலம் கிராமத்தினர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதைநம்பி சுமார் 2 ஆயிரத்து 500 மீனவர்கள் உள்ளனர்.

இந்த சூழலில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் காரணமாக, ஊர் மக்களே சில கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி தருவைகுளத்தில் உள்ள 150 நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லக் கூடாது என முடிவெடுக்கப்பட்டு யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

நாலுமாவடி இயேசு அழைக்கிறார்: 15 லட்சம் தூத்துக்குடிக்குக் கொடுத்திருக்கிறார்!

இதன் காரணமாகக் கடற்கரையில் நாட்டுப்படகுகளை மீனவர்கள் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றால் வெளியூரிலிருந்து வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் வருவதால் கிராமத்தில் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி