ஆப்நகரம்

தொடரும் தாக்குதல்; பாஜக நிர்வாகி வீட்டில் கல் வீச்சு.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி புதுகிராமத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Sep 2022, 4:17 pm

ஹைலைட்ஸ்:

  • கோவில்பட்டியில் பாஜக கொடிக்கம்பம் சேதம்
  • கொடிக்கம்பம் சேதம் வழக்கில் 3 பேர் கைது
  • பாஜக நிர்வாகி வீட்டில் கல் வீச்சால் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பாஜக நிர்வாகி வீட்டில் கல் வீச்சு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் மெயின்சாலையில் இருந்த பாஜக கொடியை சேதப்படுத்தியதாக கார்த்திக், லட்சுமணன், நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் புதுக்கிராமத்தில் உள்ள பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் குருதேவன் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் கல்வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் மெயின்சாலையில் இருந்த பாஜக கொடி கம்பத்தினை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இதனை பார்த்த பாஜக நிர்வாகிகள் கண்டித்துள்ளனர். ஆனால் அந்த நபர்கள் பாஜக நிர்வாகிகளை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

முதல்வரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார் - அதிமுக அவைத் தலைவர்

இது குறித்து பாஜகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பாஜக கொடிக்கம்பத்தினை சேதப்படுத்தியதாக கார்த்திக், லட்சுமணன், நாகராஜ் ஆகிய 3‌ பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் புதுக்கிராமத்தில் உள்ள பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் குருதேவன் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி