ஆப்நகரம்

திருச்செந்தூர் கடற்கரையில் மர்ம வெடிப்பொருள்: போலீஸார் தீவிர சோதனை!

திருச்செந்தூர் கடற்கரையில் இருந்த மர்ம வெடிப்பொருள் குறித்து பக்தர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 11 Mar 2023, 1:38 pm
திருச்செந்தூர் கடற்கரையில் கிடந்த மர்ம வெடி பொருளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil trichendur


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மர்ம வெடிபொருளை கோவில் காவல் நிலைய போலீசார் கைப்பற்றினர். அது நாட்டு வெடிகுண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கோவில் நாழிகிணறு கடற்கரை பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக்கூடிய வெடிபொருள் ஒன்று கிடந்தது .
என்.எல்.சி. நிலம் எடுக்கும் விவகாரம்: ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!
இது குறித்து பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வெடிபொருளை கைப்பற்றினர். இது நாட்டு வெடிகுண்டா அல்லது திருவிழாவின் போது போடப்பட்ட வெடி பொருளா, என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் அணி திரளும் ரஜினி ரசிகர்கள்: பங்கு பெறும் அரசியல் புள்ளிகள் - என்ன காரணம்? பின்னணி என்ன?
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் கூடும் திருச்செந்தூர் கடற்கரையில் மர்ம வெடிப்பொருள் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி