ஆப்நகரம்

கரை ஒதுங்கிய 500 கிலோ டால்பின்... அதிகாரிகள் விசாரணை!

தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 500 கிலோ எடை கொண்ட டால்பின் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 27 Apr 2020, 6:30 pm
தூத்துக்குடி அருகே 500 கிலோ எடைகொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதுதொடர்பாக மன்னார் வளைகுடா தேசிய கடல் வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil கரை ஒதுங்கிய 500 கிலோ டால்பின்


கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாக மன்னார் வளைகுடா கடல் பகுதி திகழ்கிறது. முக்கியமாக, மற்ற பகுதிகளில் குறைவாக காணப்படும் டால்பின்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மிகுதியாக காணப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக மன்னார் வளைகுடாவை ஒட்டியிருக்கும் தூத்துக்குடி கடலோர பகுதியில் இறந்த டால்பின்கள் கரை ஒதுங்குவது வாடிக்கையாகியுள்ளது. கப்பல் போக்குவரத்து, ஒலி மாசு, காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் டால்பின்கள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக, கப்பல்களில் அடிபட்டு இறக்கும் டால்பின்கள் அதிகம்.

இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள புல்லாவழி கடற்கரை பகுதியில் சுமார் 500 கிலோ எடை கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் உடனடியாக மன்னார் வளைகுடா தேசிய கடல்வாழ் உயிரின காப்பக் அதிகாரிக்ளுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அதிகாரிகள், கடற்கரையில் இறந்த நிலையில் கிடந்த டால்பினை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து கடற்கரை பகுதியிலேயே குழிதோண்டி புதைத்தனர்.

மேலும், டால்பின் எப்படி இறந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தட்பவெப்பநிலை காரணமாக இறந்தனவா அல்லது கப்பலில் அடிப்பட்டு இறந்தனவா அல்லது வேறு காரணங்களால் இறந்தனவா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அடுத்த செய்தி