ஆப்நகரம்

பல கோடிகளை இழந்த துறைமுகம் - கதறும் ஏற்றுமதியாளர்கள்!

கொரோனா ஊரடங்கால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கப்பல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Aug 2020, 7:50 pm
கொரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி 40 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil தூத்துக்குடி துறைமுகம்




இதுகுறித்து தூத்துக்குடி துறைமுக கப்பல் முகவர்கள் சங்க தலைவர் வேல்சங்கர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “கொரோனா ஊரடங்காலும், பல்வேறு தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தாலும் தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த மூன்று மாதத்தில் இறக்குமதி 15 விழுக்காடும், ஏற்றுமதி 40 விழுக்காடும் சரிந்துள்ளன

இதன் விளைவாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு கொரோனா ஊரடங்கில் அளித்த சலுகைகள் கீழ் மட்டம் வரை கிடைக்கவில்லை. பத்து லட்சம் சதுர அடி சரக்கு குடோன்கள், 1000 லாரிகள், இதனைச் சாா்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக தூத்துக்குடியை விட்டு வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்களை தற்போது மீண்டும் தூத்துக்குடிக்கு அழைத்துவர தொடங்கியுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதால் 3 மில்லியன் டன் சரக்கு கையாளுவது பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி