ஆப்நகரம்

தூத்துக்குடியில் மேலாளர் டார்ச்சரால் உப்பளத்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.. போலீஸிடம் சிக்கிய பகீர் கடிதம்..!

மேலாளர் டார்ச்சரால் கடிதம் எழுதி வைத்து விட்டு உப்பளத்தொழிலாளி உப்பளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 13 Mar 2023, 4:40 pm

ஹைலைட்ஸ்:

  • மேலாளர் டார்ச்சரால் கடிதம் எழுதி வைத்து விட்டு உப்பளத்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
  • பல பேருடைய வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக குற்றச்சாட்டு
  • குளத்தூர் போலீஸ் விசாரணை‌
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தூத்துக்குடியில் மேலாளர் டார்ச்சரால் உப்பளத்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
மேலாளர் டார்ச்சரால் கடிதம் எழுதி வைத்து விட்டு உப்பளத்தொழிலாளி உப்பளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலாளிக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உப்பளத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூரைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளி வேல்முருகன் என்பவர், தான் பணியாற்றும் உப்பளத்தின் மேலாளர் விஜயகுமார் என்பவர், தன்னிடம் வாங்கிய 1 லட்சத்து 90 ஆயிரம் பணத்தினை வாங்கி கொண்டு, தர மறுப்பது மட்டுமின்றி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதால் தற்கொலை செய்து கொள்வதாக தனது முதலாளிக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உப்பளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேல்முருகன் உடலை குளத்தூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் என்பவரின் மகன் வேல்முருகன். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 1 மகள் என 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் அப்பகுதியில் உள்ள K.S.P.S. நடராஜன் & கோ என்ற தனியார் உப்பள நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் குளத்தூர் ஊராட்சியில் 11-வது வார்டு உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.


இந்த நிலையில் நேற்று உப்பளத்திற்கு பணிக்கு சென்ற வேல்முருகன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது வேல்முருகன் தனது நிறுவனத்தின் முதலாளிக்கு தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வாட்ஸ் அப்பில் அனுப்பியது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த வேல்முருகனின் குடும்பத்தினர் குளத்தூர் காவல் நிலையத்தில் வேல்முருகனை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

போலீசாரும், குடும்பத்தினரும் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை உப்பளத்துக்கு பணிக்கு சென்றவர்கள் பணிக்கு தேவையான பொருட்களை எடுப்பதற்காக அங்கிருந்த ஷெட்டிற்கு சென்று பார்த்தபோது வேல்முருகன் இறந்த நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து உப்பளத்திற்கு வந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் வேல்முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் தனது தற்கொலைக்கு தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் மேலாளர் விஜயகுமார் தான் காரணம் என்று எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

உயிரிழந்த வேல்முருகன் தனது முதலாளிக்கு எழுதிய அந்த தற்கொலை கடிதத்தில்: ஐயா மன்னிக்கவும். இந்த தற்கொலை முடிவுக்கு காரணம் ப்ரொடக்ஷன் மேனேஜர் விஜயகுமார் தான். அடிக்கடி போனிலும் நேரிலும் காரணம் இன்றி மட்டம் தட்டி தரக்குறைவாக பேசுகிறார். தகாத வார்த்தைகளில் 30 வருஷம் வேலை பார்த்து என்னத்த கிழிச்சீங்க என்கிறான். நீங்க டீம் ஒர்க் பண்ணுங்க என்று சொன்ன ஒரே காரணத்துக்காக பொறுமையாக இருந்து வந்தேன்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு என்னிடம் அவசரமாக வீட்டு வேலை நடக்கிறது. பணம் 2 லட்சம் வேண்டும் என்று கேட்டு என்னிடமிருந்து சீட்டு போட்டு பணம் 1,90,000 ஆயிரம் ரூபாய் 6 மாதத்தில் தந்து விடுகிறேன் என்று சொல்லி வாங்கிவிட்டார். 4 மாதமாக தருகிறேன் தருகிறேன் என்று சொன்னவர் இப்போது அது எல்லாம் முடியாது. நீ முதலாளியிடம் சொன்னால் நம்ப மாட்டார். நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் முதலாளி கேட்பார். மீண்டும் பணத்தை என்னிடம் கேட்டால், உன்னை ஏதாவது காரணம் சொல்லி உன்னை வேலையை விட்டு துரத்தி விடுவேன் என்கிறார்.

என்னிடம் பணத்தையும் பறித்துக் கொண்டு, என்னை கடுமையாகப் பேசி மட்டம் தட்டி பேசுகிறார். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி என்னை தற்கொலை செய்யும் அளவுக்கு செய்து விட்டார். இன்று காலை 10 மணி முதல் 1 மணி நேரத்தில் 10 முறை போன் செய்து என்னை ரொம்ப டார்ச்சர் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார்.

விஜயகுமாருக்காக, அவர் புது வீடு கட்ட, என்னை புதுசா 2 (லட்ச ரூபாய்) சீட்டு போட சொல்லி அதை 20,000க்கு மேல் தள்ளி எடுத்ததால மாத மாதம் ரூபாய் 20 ஆயிரம் கட்ட வேண்டியது உள்ளது. அனைவரும் பணம் தருகிறேன் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டார். அவர் என்னிடம் பணம் ரூ.1,90,000 ஆயிரம் என்னிடம் வாங்கியதை உங்கள் வீட்டிலோ, முதலாளியிடமோ சொன்னீங்கன்னா உங்களை வேலையை விட்டு விலகி விடுவேன் என்று சொல்லி 10 மாதமாகவே மிரட்டி வருகிறார். என்னைப்போல இன்னும் பல பேருடைய வாழ்க்கையை சீரழித்துவிட்டார்.

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்; இதுவரை சிக்காத குற்றவாளிகள்.. கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு!

பல பேரை பிளான்ட்ல வேலையை விட்டு நீக்கி விட்டார். இப்படி பல பேரிடம் பணத்தையும், பல பெண்களின் குடும்பத்தையும் சீரழித்துவிட்டார். இது பிளான்ட் ல எல்லோருக்கும் தெரியும். நீங்கள் அவருக்கு முழு பவர் கொடுத்து வைத்து இருப்பதால் என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்று தெனாவட்டாக பேசி வருகிறான். என்னுடைய சாவு அவனுக்கு பதிலடி கொடுக்கும். மேனேஜர் என்று மதிப்பு மரியாதை கொடுத்து தான் இதுவரை வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய தன்மானத்தையும் இழந்து, பணம் 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயையும் பறி கொடுத்து என்னுடைய உயிரையும் பறித்து விட்டான். என்னுடைய சாவுக்கு முழு காரணம் விஜயகுமார் தான் காரணம். அவனுக்கு தக்க தண்டனை கிடைக்க வழிவகை செய்யுங்கள் என்றும்,

முக்கியம் எனக் குறிப்பிட்டு,பகல் 12 மணிக்கு சக்கரவர்த்தி முதலாளியிடம் புகார் அளித்தேன். விஜயகுமார் பற்றி பண மோசடி பற்றி இன்னும் பேசல என்று எழுதி இப்படிக்கு உங்கள் உண்மையுள்ள ஊழியன் என்று தனது கையெழுத்து போட்டுள்ளார்.

இக்கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி வேல்முருகனின் தற்கொலைக்கு அவர் எழுதி வைத்திருந்தது போன்ற மேனேஜர் விஜயகுமார் தான் காரணமா? பணம் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டாரா? என்று போலீசார் மேனேஜர் விஜயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி