ஆப்நகரம்

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கெமிக்கல் கழிவு: நடவடிக்கை எடுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

உப்பாற்று ஓடையில் கெமிக்கல் கழிவுகளை கலந்த மூன்று நிறுவனங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 7 Feb 2023, 4:54 pm
தூத்துக்குடி அருகே கோமஸ் புரம் பகுதியில் உப்பாற்று ஓடையில் கழிவுகளை கலந்த மூன்று மீன் பதனிடும் தொழிற்சாலைகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Samayam Tamil thoothukudi water pollution


தூத்துக்குடி அருகே உள்ள ஹோமஸ்புரம் பகுதியில் 6க்கும் மேற்பட்ட மீன் பதனிடும் தொழிற்சாலைகள் உப்பாற்று ஓடை அருகே அமைந்துள்ளன.

இதில் சில நிறுவனங்கள் மீன் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல்களையும் மீன்களை கழுவுவதற்கும் பயன்படுத்தும் கெமிக்கலையும் சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே உப்பாற்று ஓடையில் விட்டதால் உப்பாற்று ஓடை முழுவதும் சிவப்பு நிறமாக மாறி இரத்த ஆறு போல காட்சி அளித்தது. இந்த நிலை தொடர்ந்து வந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் உப்பளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

துருக்கியில் 5ஆவது நிலநடுக்கம்: உதவிக் கரம் நீட்டும் இந்தியா - மீட்புக் குழுவினருடன் புறப்பட்ட விமானம்!

இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரினை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரடியாக அந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்து கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

ஈரோடு கிழக்கு : ஓட்டுக்கு இவ்வளவா? தொகுதி ஹாட் களநிலவரம் இது தான்!

இதை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கோமஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள மீன் பதனிடும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து முறையாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் உப்பாற்று ஓடைகளில் கழிவுகளை வெளியிட்ட மூன்று மீன் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விதிமுறைகளை மீறிய மூன்று தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி மறுத்ததுடன், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்டனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி