ஆப்நகரம்

சுங்கச்சாவடிகள் அகற்றம்; மெகா பிளானை போட்டு உடைத்த அமைச்சர் எ.வ.வேலு!

தமிழகத்தில் சுங்கச்சாவடி அகற்றம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 21 May 2022, 9:28 am

ஹைலைட்ஸ்:

  • தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்
  • சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன
  • சுங்கச்சாவடிகள் அகற்றம் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு முக்கிய தகவல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Toll Gates

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாலை விபத்துகளை தடுப்பது, குறைப்பது போன்றவை தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டன. பின்னர் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சாலை விபத்துகள் பல்வேறு குடும்பங்களை பெரிய அளவில் பாதிக்கின்றன. பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே தான் சாலை பாதுகாப்பு வாரம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வெடித்தது உட்கட்சி பூசல்; பாய்ந்தது குண்டாஸ்- தூத்துக்குடி திமுகவில் களேபரம்!

சாலை விதிகளை பொதுமக்கள் மதித்து நடக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனப் பயணத்தில் இருவருக்கு மேல் கூடுதல் நபர்கள் செல்வதை முற்றிலும் தடுக்க வேண்டும். மீறுபவர்கள் மீது காவல்துறை மற்றும் மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஓட்டுநர் உரிமம் வழங்கும் போது, நன்றாக ஓட்டத் தெரிகிறதா என்பதை ஆய்வு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தான் தமிழக அரசின் எண்ணம். நமது மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை இருக்கிறது.

அதனை பின்பற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்த மத்திய அமைச்சர், தமிழகத்தில் அதிக அளவில் சுங்கச்சாவடிகள் உள்ளன. வரும் காலங்களில் 60 கிலோமீட்டருக்குள் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்: அழகிய வாழ்த்துரை எழுதிய அன்பில் மகேஷ்!

இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவு பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி